Wednesday, December 24, 2008

முதல் ஆண்டு நினைவு அஞ்சலி

வல்லமை தாராயோ

இன்றுடன் ஒர் வருடம். ஆம், தந்தையில்லா பிள்ளையாய் நான் வாழ வற்புறுத்தப்பட்டு இன்றுடன் ஒர் வருடம். கடந்த ஒர் ஆண்டை அசை போடுகின்றேன்.... நான் தேடி பார்த்தும் குறை ஒன்றும் கண்டு விட முடியவில்லை. என்னை நல்ல நிலையிலேயே விட்டுச் சென்றிருக்கிறார். நல்ல கல்வி, செல்வத்தை தேடி ஓடத் தேவையற்ற நிலை, அன்பைப் பொலிய தாய், வேண்டுமென்று கேட்குமுன்னே உதவும் உற்றார், வேறன்ன வேண்டும் இம்மானுட பிறவிக்கு? “குறையொன்றும் இல்லை கண்ணா, கோவிந்தா, கோபாலா” என்று பாடிக் கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் அதுவன்று என் மனனிலை. ஏதோ ஓர் ஏக்கம், ஏதோ ஓர் வெறுமை. ஆம் என் பிடி வாதத்திற்கு ஈடு கொடுத்து, நான் எதிர்ப்பேன் என்றும் பொருட்படுத்தாமல் என் தவறுகளை கண்டித்து, என் தேவைகளை நானே அறியும் முன்னே பூர்த்தி செய்யுது, இன்னும் எவ்வளவோ இல்லாமல் வாழ்க்கை ஓர் வெறுமையாகத்தான் தோன்றுகிறது.

ஒரு பொழுதும் நேரடியாக பேசிக் கொண்டதில்லை, இருப்பினும் ஓரு பொழுதும் இருந்ததில்லை எண்ண இடைவெளி. இருவரும் ஓற்ற வழியில் சிந்ததில்லை, இருப்பினும் சொல்லாமலே ஒருவர் முடிவை மற்றொறுவர் அறிந்தே இருந்தோம். வள்ளுவன் வாக்கிற்கினங்க “இவன் தந்தை இவனை பெற என்னோற்றான் கொள்” என பெருமைப் பட வைக்கவில்லை இருப்பினும் அத்தகு மக்கட்க்கு மேல் மெச்சப் பட்டேன்.

அந்தோ இவை அனைத்தும் ஓர் நாளில் மறைந்ததை தாங்கும் பக்குவத்தை கற்றுக் கொடுக்க தவறினாரே. என்னை மழுமை படுத்திய பின்பே காலனுக்கு தன்னை இறையாக்கியவரை கண்டு விடும் கண்ணீர் அவர் ஆன்மாவை கழங்க வைக்கும் என்று உணர்ந்த என் மனம், அவர் இல்லாமல் வாழ்க்கை முன்னே சென்றுதானாக வேண்டுமென என ஏனோ உணர மறுக்கிறது. உலகில் அனைத்தும் ஓர் சக்தி, அவற்றின் அதிர்வழைகள் மட்டுமே வேறென தெறிந்தும் அதனை ஏற்க பக்குவப் படாத மனத்துடன் எங்ஙகனம் இவ்வாழ்வின் தேடலைத் தொடருவேன்?

ஆனால் நான் நின்று விட போவதில்லை. வாழ்வில் பொருளையோ, வாழ்வின் பொருளையோ தேடி ஓடப் போவதமில்லை. எதுவும் நிலையில்லை என்ற புலத்துடன், என்னுள் இருக்கும் ஆனந்தத்தை மட்டுமே நோக்க எத்ததனிக்கிறேன். என்னை பக்குவப்பட வழி நடத்த வேண்டு்ம் என் தந்தையே!

“உலகாள எண்ணி,
பல பினி கண்டு,
நின்னடி சறனடைந்தேன்,
என் கண் திறவாயோ?”

About Me